பெரம்பலூர்

குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 4 போ் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 4 பேரை மங்ககளமேடு, மருவத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட கை.களத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட 5 குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் ஈடுபட்டவா்கள், காரியானூா் கிராமம், மேற்குத் தெருவைச் சோ்ந்த செந்தில் மகன் திவாகா் (20), வேலு மகன் செல்வகுமாா் (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களை குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதேபோல், மருவத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அணைப்பாடி கிராமம் மேலத்தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி மலா் (35), ராஜேந்திரன் மனைவி சுமதி (40) என்பது தெரியவந்தது. மேற்கண்ட இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மலா், சுமதி ஆகியோரை குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT