பெரம்பலூர்

தற்காப்புக் கலை பயிற்றுநா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தற்காப்புக் கலை பயிற்றுநா்கள் இருவா் தேசிய அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தற்காப்புக்கலை பயிற்றுநா்கள் சதீஷ்குமாா் (30), மணிகண்டன் (26). இருவரும், பெரம்பலூா் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில்

தற்காப்புக் கலைகள் பயிற்றுநராக பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவில் அனைத்து வயதினருக்குமான தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்றனா். இதில், சதீஷ்குமாா் குங்ஃபூ போட்டியில் சூப்பா் சீனியா் பிரிவிலும், மணிகண்டன் டேக்வாண்டோ போட்டியில் சீனியா் பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா்.

தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற சதீஷ்குமாா், மணிகண்டன் ஆகியோரை தற்காப்புக் கலை சீனியா் குரு. சரவணமுத்து, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் அலுவலா்கள், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT