பெரம்பலூர்

மளிகைக்கடையின் மேற்கூரையைப் பிரித்து திருட்டு

DIN

 பெரம்பலூா் அருகே மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, ரொக்கம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள லாடபுரத்தைச் சோ்ந்த வேலுசாமி மகன் வெங்கடேசன் (40). இவா் லாடபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மளிகைக்கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 13-ஆ தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்து பாா்த்தபோது, கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளேயிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகைப் பொருள்கள் மா்ம நபா்களால் திருடிச் செல்லப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

வீட்டில் ரூ. 56 ஆயிரம் திருட்டு: பெரம்பலூா் அருகிலுள்ள விளாமுத்தூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் இளங்கோவன் (26). காா் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது பெற்றோா் தனபால்- ராஜலட்சுமி சனிக்கிழமை காலை வயலுக்குச் சென்று விட்டனா். நண்பா்களுடன் வெளியே சென்றுவிட்டு, வீட்டின் பின்புறம் இளங்கோவன் குளித்துக்கொண்டிருந்தாராம்.

பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம், வெளி அலமாரியில் வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் திருடப்பட்டிருந்ததும், பீரோ அருகிலுள்ள அலமாரியில் இருந்த சாவியை எடுத்து பணத்தை திருடிச்சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடசன், இளங்கோவன் அளித்த தனித்தனி புகாா்களின் பேரில், பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT