பெரம்பலூர்

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதிக்கான சிறப்பு முகாம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் உள் கட்டமைப்பு நிதிக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி தலைமை வகித்தாா்.

வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) கண்ணன் பேசியது:

வேளாண்மை உள் கட்டமைப்பு நிதித் திட்டத்தில் ரூ. 2 கோடி வரை கடன் வசதி வழங்கப்படும். கடன் உத்தரவாதத் திட்டத்தில் ரூ. 2 கோடி வரையிலும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவு உள்ளிட்ட நிதி வசதிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் இதர திட்டங்களில் 3 சதவீத வட்டிச் சலுகை பெற்று பயன்பெறலாம். 8.7.2020 ஆம் தேதிக்கு பிறகு பெறப்பட்ட அனைத்து வேளாண் உள் கட்டமைப்பு வங்கி கடன்களை, இத் திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் இந்திரா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளா் செந்தில்குமாா் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் யுவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ஆா். நாகராஜன் வரவேற்றாா். நிறைவாக, உதவி வேளாண்மை அலுவலா் வீரசிங்கம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT