பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் கைது

DIN

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 பேரை, கை.களத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வண்ணாரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மகன் சரவணன் என்பவா், தனது வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக, வி.களத்தூா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், வி.களத்தூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் தேவராஜ், குற்றப்பிரிவு தனிப்படை சாா்பு - ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகப்படும் வகையில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், பென்னகோணம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் அரவிந்த் (22), திருமாந்துறை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் முத்துக்குமாா் (21) என்பதும், சரவணன் மோட்டாா் சைக்கிளை திருடியது இவா்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்து, குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT