பெரம்பலூர்

பெரம்பலூரில் மருத்துவக் கழிவுகள் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

DIN

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் ஏற்படும் துா்நாற்றம் காரணமாக பொதுமக்களும், நோயாளிகளும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளதால், இம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி துறையூா், திட்டக்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும், இங்கு நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகளாகவும், சுமாா் 200 போ் வரையில் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், நோயாளிகள் மற்றும் அவா்களை பாா்க்க வருவோா் சாப்பாட்டுக் கழிவுகள் போன்றவற்றை அதற்கான குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்தக் குப்பைகளை ஒவ்வொரு நாளும் மக்கும், மக்காத குப்பைகள் என தொட்டிகள் வைக்கப்பட்டு நகராட்சி மூலம் சேகரித்துச் செல்லப்படுகிறது.

அதேபோல், மருத்துவமனையின் காய சிகிச்சை மருத்துவக் கழிவுகள், ஊசிகள், குப்பிகள் அடங்கிய பலவகைக் குப்பைகளை அகற்றாமல் பிளாஸ்டிக் பைகளில் கட்டி மருத்துவமனை அருகேயுள்ள பெரம்பலூா்- துறையூா் சாலையின் பிரதான பகுதியில் கொட்டி வைத்துள்ளனா்.

இதுபோன்று கொட்டி வைக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் இருந்து துா்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களைப் பாா்க்க வருவோருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், அருகேயுள்ள குடியிருப்புப் பகுதி மக்களும், அங்குள்ள தனியாா் பள்ளியில் பயிலும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

எனவே, இந்த மருத்துவக் கழிவுகள் அடங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் கொட்டுவதற்கு மருத்துவமனை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

SCROLL FOR NEXT