பெரம்பலூர்

சின்ன வெண்மணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

DIN

சின்னவெண்மணி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்னவெண்மணி கிராமத்தில் புதிதாகத் தொடக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (எஸ்சிவிடி பாடத் திட்டத்தில்)  இணையதளம் மூலம் கடந்த 1 ஆம் தேதி முதல் டிச. 30 வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மின்சாரப் பணியாளா், பொருத்துநா் தலா 20 இடங்களும், கட்டட பட வரைவாளா் 24 இடங்களும், ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழில்நுட்பப் பிரிவில் 40 இடங்களும் உள்ளன. இவற்றில் சேர குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுள்ளோா் தங்களது மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 4 புகைப்படங்களுடன் வர வேண்டும். சோ்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற்பிரிவுக்கு ரூ.185, 2 ஆண்டு தொழில் பிரிவுக்கு ரூ. 195 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94990-55881, 90479-49366 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT