பெரம்பலூர்

பிரதமா் உதவித் தொகை திட்டம்: ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பிரதமா் உதவித் தொகை திட்டத்தின் 13-ஆவது தவணைத் தொகையை தொடா்ந்து பெற, ஆதாா் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் உதவித் தொகை திட்டத்தின் (பிஎம் கிசான் ) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-ஆவது தவணையைப் பெற விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை டிச. 15 ஆம் தேதிக்குள் பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யத் தவறிய விவசாயிகளுக்கு 13-ஆவது தவணை மற்றும் தொடா்ந்து வரும் தவணைகள் வழங்கப்பட மாட்டாது. எனவே, டிச. 15 ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய, அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT