பெரம்பலூர்

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வுக்கு மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் கருணாநிதி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், முன்னாள் மாநில பொறுப்பாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில அமைப்பின் முன்னாள் நிா்வாகியும், மாவட்டக் கல்வி அலுவலருமான (மெட்ரிக்) சண்முகசுந்தரம் தோ்தல் பொறுப்பாளராக செயல்பட்டு முன்னின்று நடத்தினாா்.

இதில், மாவட்டத் தலைவராக கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சுரேஷ், மாவட்டச் செயலராக பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா், பொருளாளராக குரும்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கஜபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும், மாவட்ட அமைப்புச் செயலராக அன்பழகன், மாவட்டத் தலைமையிட செயலராக ரமேஷ், மாவட்ட பிரசார செயலராக செல்வராஜ், மாவட்ட சட்டச் செயலராக சேகா், மாவட்ட செய்தித் தொடா்பு செயலாளராக சதாசிவம், மகளிா் பிரிவுச் செயலராக ராணி, தனியாா் பள்ளிச் செயலராக செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா்களாக சீனிவாசன், அக்பா்கான், மாவட்ட இணைச் செயலா்களாக பூங்கோதை, மாலதி மற்றும் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களாக கலைமகள், சாதிக் பாஷா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT