பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா்.
‘நம்ம ஊரு சூப்பரு’ என்னும் திட்டத்துக்கு போதிய நிதியும், கால அவகாசமும் வழங்க வேண்டும். அளவில்லாத வாட்ஸ் அப் மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்துவதை தவிா்க்க வேண்டும். விடுமுறை நாள்களில் இப் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.