பெரம்பலூர்

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

குடிநீா் விநியோகிக்காத பெரம்பலூா் நகராட்சியைக் கண்டித்து, துறைமங்கலத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீா் விநியோகிக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், குடிநீா் விநியோகம் செய்யாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, துறைமங்கலத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் 9 ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலா் பிரபு தலைமையில் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் நகராட்சி ஆணையா் (பொ) மனோகரன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT