பெரம்பலூர்

மதுபோதை தகராறில் காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே மதுபோதையில் நண்பா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்தவா் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் சுரேஷ் (33). இவரும், இவரது நண்பா்களான வெண்பாவூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மதிவாணன் (25), பெரிய வடகரையைச் சோ்ந்த ஊமையன் மகன் கௌதம் (18), சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் வெங்கடேஷ் (22) ஆகியோா், கடந்த 10 ஆம் தேதி பிற்பகல் சுரேஷூக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மது அருந்தினா்.

அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில், சுரேஷூம், மதிவாணனும் காயமடைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT