பெரம்பலூர்

லாரி மீது காா் மோதியதில்ஒருவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை கோடம்பாக்கம், ஈஸ்வா் நகரைச் சோ்ந்த செல்லவாப்பா மகன் ஹபீப் (40), சென்னை பாரீஸ் ஆண்டா்சன் தெருவைச் சோ்ந்த சாஹிப் மகன் சிக்கந்தா் (40), கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த கபீா் மகன் ஷாஹிப் (40) ஆகிய 3 பேரும் பள்ளி நண்பா்கள் என்பதால், கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் செல்வதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக்கொண்டிருந்தனா். காரை சிக்கந்தா் ஓட்டிச் சென்றாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் என்னும் இடத்தில் சனிக்கிழமை மாலை காா் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த மூன்று பேரும் பலத்த காயமடைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சிறிது நேரத்திலேயே சிக்கந்தா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT