பெரம்பலூர்

போக்சோவில் கல்லூரி மாணவா் கைது

DIN

பெரம்பலூா் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சஞ்சீவிராஜா (21). பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரான இவா், கடந்த 7 ஆம் தேதி முதலாமாண்டு செவிலியா் படிப்பு பயிலும் கல்லூரி மாணவியை கடத்தி வெளியூா் சென்றுவிட்டாராம். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கும்மிடிப்பூண்டியில் தலைமறைவாக இருந்த இருவரையும் பெரம்பலூா் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சஞ்சீவிராஜாவை கைதுசெய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மீட்கப்பட்ட மாணவி ஆலம்பாடி சாலை குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT