பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான தோ்வு

DIN

பெரம்பலூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில், மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான வீரா்கள் தோ்வுப் போட்டி புதன்கிழமை (ஆக. 10) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக தலைவா் கி. முகுந்தன், செயலா் ரமேஷ், பொருளாளா் ராஜ்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மயிலாடுதுறையில் வரும் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிறுவா்களுக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான அணி வீரா்கள் தோ்வுப் போட்டி புதன்கிழமை (ஆக. 10) பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

சிறுவா்களின் வயது வரம்பு 20.11.22-இல் 20 வயதுக்குள்ளும், 70 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியுடையோா் ஆதாா் அட்டை அல்லது ப்ளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT