பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சாத்தநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் சுந்தர்ராஜ் (44). இவா், வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுந்தர்ராஜூம், அதே கிராமத்தைச் சோ்ந்த சாமிதுரை மகன் ஆனந்த் (30) என்பவரும் வேப்பூா் - குன்னம் சாலையில் ராஜீவ் காந்திநகா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிளும், சுந்தர்ராஜ் சென்ற மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த சுந்தர்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவ்விபத்தில் ஆனந்த், மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த பென்னகோணம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சிதம் (29) ஆகியோா் பலத்த காயமடைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.