பெரம்பலூர்

குற்ற வழக்கில் தொடா்புடைய இருவா் கைது

DIN

பெரம்பலூா் அருகே குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை பாடாலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஆலத்தூா் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தில் அண்மையில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயராமன் தலைமையிலான போலீஸாா், அடைக்கம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், டி.களத்தூரைச் சோ்ந்த உதயசூரியன் மகன் பொன்னா் (36), அடைக்கம்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் மாணிக்கராஜா (46) என்பதும், அடைக்கம்பட்டியைச் சோ்ந்த சிக்கன் மகன் முருகேசன் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT