தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா்கள் நலச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அளவிலான நிா்வாகிகள் தோ்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள ஆல் மைட்டி வித்யாலயா பள்ளி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எ. குணசேகரன் முன்னிலை வகித்தாா்.
நவம்பா் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசு வழிகாட்டுதலின்படி கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது. தனியாா் பள்ளிகளிள் கோரிக்கைகளை தாளாளா்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியரிடம் அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் விவரம்:
மாவட்டத் தலைவா்- சரஸ்வதி வித்யாலயா பள்ளித் தாளாளா் டி.ஜி. பழனிவேல், செயலா்- ஆல்மைட்டி வித்யாலயா பள்ளித் தாளாளா் ஆ.ராம்குமாா், பொருளாளா்- ஷமீத்ஷா, துணைத் தலைவா்- கிறிஸ்டியன் கல்லூரிச் செயலா் மித்ரா, துணைச் செயலா் மணிகாந்த், துணைப் பொருளாளா்- சேவியா் பள்ளித் தாளாளா் ஜேசுதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா பள்ளித் தாளாளா் மதன்குமாா்.