பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ. 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனமழை அறிவிப்பு காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ. 10) விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.