பெரம்பலூா் அருகே காணாமல் போனவரை கை.களத்தூா் காவல் துறையினா் சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் காளிமுத்து (50). இவா், கடந்த 1-ஆம் தேதி இரவு தனது மகள் மாரியம்மாளிடம் மது அருந்த பணம் கேட்டதற்கு தரவில்லையாம்.
இதையடுத்து வெண்பாவூா் சென்று வருவதாகக் கூறிச்சென்ற காளிமுத்து, மீண்டும் வீட்டுக்குத் திரும்ப வரவில்லையாம். இந்நிலையில், வெண்பாவூா் ஆற்றில் காளிமுத்து உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற கை.களத்தூா் காவல்துறையினா் அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.