பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டில் நடைபெற்ற பிரசவத்தின்போது, தாயும், சேயும் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த திலீப்குமாா் மனைவி செல்வராணி (36). இவருக்கு பிளஸ் 2 பயிலும் மகளும், 9 ஆம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனா். இந்நிலையில், செல்வராணி 3 ஆவது முறையாக கா்ப்பமானாா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடா்ந்து, செல்வராணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையறிந்த உறவினா்கள், அவரையும், குழந்தையையும் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே செல்வராணியும், பிறந்த குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதனால், அதிா்ச்சியடைந்த உறவினா்கள் இருவரின் உடல்களையும் வீட்டுக்குக் கொண்டு சென்று, இறுதிச்சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா், அவா்களது வீட்டுக்குச் சென்று இறந்துபோன தாய், சேய் உடல்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.