பெரம்பலூர்

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா பேசியது:

பெற்றோா்களும், ஆசிரியா்களும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உரிமைகள், அவா்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்திடும் வகையில், அவா்களை உன்னிப்பாக கண்காணித்து தயாா்படுத்திட வேண்டும். அதற்கான அனைத்து சட்ட உதவிகளையும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், வழக்குரைஞா் கவியரசு, வேப்பந்தட்டை மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் ஆறுமுகம், சிறப்பாசிரியா்கள் பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT