பெரம்பலூர்

அரசுக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் இயக்குநா் முனைவா் நா. ஜானகிராமன் தலைமை வகித்தாா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் ரேவதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் முனைவா் வெற்றிவேல், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் வரலாறு, நோக்கம், முக்கியத்துவம், மக்கள் பணிகள் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மாணவா்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து பேசினாா்.

விழாவில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் ம. பிரதாப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT