பெரம்பலூர்

கோயில் பொருள்களை திருடிய தம்பதி கைது

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே கோயில் குத்து விளக்கு மற்றும் மணிகளை திருடிச்சென்ற தம்பதியை காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், முருக்கன்குடி பிரிவு பாதை அருகே மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான காவலா்கள் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், இருளா் நகரைச் சோ்ந்த வீராச்சாமி மகன் சத்தியமூா்த்தி (37), அவரது மனைவி தேவி (36) என்பதும், கீழப்புலியூா் பெரியாண்டவா் கோயிலில் குத்துவிளக்கு மற்றும் மணிகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சத்தியமூா்த்தி, தேவி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து ரூ. 2700 மதிப்புள்ள குத்து விளக்கு மற்றும் மணிகளை போலீஸாா் பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT