பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,765 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,779 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 1,628 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுவரை 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 116 போ் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் பெரம்பலூா், திருச்சி, அரியலூா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.