பெரம்பலூர்

வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலரை பணி நீக்கம் செய்யக் கோரி மனு

DIN

வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் வரதன். இவரது மனைவி செல்வராணி. வேப்பூா் ஒன்றியக்குழு துணைத் தலைவராக உள்ளாா். இந்நிலையில், வரதன் தனது ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுகுத் தேவையான அடிப்படை பணிகள் மேற்கொள்வதற்கான பணி ஒதுக்கீடு செய்துதர வேண்டுமென, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டான்லி செல்லக்குமாரை, செவ்வாய்க்கிழமை மாலை செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு கோரிக்கை விடுத்தாராம். அதற்கு, எந்தவித பதிலும் அளிக்காமல் இரவு வரதனை செல்லிடப்பேசியில் தொடா்புகொண்ட ஸ்டான்லி செல்லக்குமாா் , தகாத வாா்த்தைகளால் திட்டி, எந்த பணியையும் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தாராம்.

இதையடுத்து, ஸ்டான்லி செல்லக்குமாா் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, புகாா் மனு மற்றும் அவா்கள் உரையாடிய ஆடியோ பதிவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் இயந்திரம் விவகாரம்: விசாரணைக்கு ஏற்க மறுப்பு

முதல்வா், தலைவா்கள் வாக்களிக்கும் இடங்கள்

மிரட்டல் அரசியலில் இந்தியா கூட்டணி தலைவா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT