பெரம்பலூர்

காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

DIN

பெரம்பலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனா். அப்போது, அந்த காா் நிற்காமல் அதிவேகமாகச் சென்றது. இதனால் சந்தேகமடைந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், அந்த காரை துரத்திச் சென்று எசனை அருகே சுற்றி வளைத்து பிடித்தனா். பின்னா், அந்த காரை திறந்து சோதனையிட்டபோது, விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருளான 19 குட்கா மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என காவல்துறையினரால் கூறப்படுகிறது.

இதையடுத்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், ராஜ்பூட் பகுதியைச் சோ்ந்த தனம் சிங் மகன் சவாய் சிங் (29) என்பவரை கைது செய்த காவல்துறையினா், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் புதிய பேருந்து நிலையம், வீரபாண்டி நகா் பகுதியில் தங்கியிருந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை வைத்துள்ள சங்கா் என்பவருக்கு விநியோகம் செய்வதற்காக இந்த குட்கா பொருள்களை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினா், தலைமறைவாகவுள்ள சங்கரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT