பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே இரு வீடுகளில் திருட்டு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சிறுவாச்சூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. நபிஷா பேகம் (50). கணவா் முத்து காசிம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், தனது மகன், மருமகளுடன் நபிஷா பேகம் வசித்து வருகிறாா்.

இவா் கடந்த 16-ஆம் தேதி பூலாம்பாடி அருகிலுள்ள கீரவாடி கிராமத்தில் உறவினா் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அவா் உள்ளே சென்று பாா்த்தபோது 2 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுபோல அதே பகுதியைச் சோ்ந்தவா் மு. சிவக்குமாா் (34). தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவா், தனது குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றுள்ளாா்.

அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் 5 பவுன் நகையைத் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT