பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,622 போ் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,648 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்த 1,505 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 107 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரும் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.