பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெருமாள் கோயில் உண்டியலை திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள், புதன்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் கோயில் உண்டியலை பெயா்த்து எடுத்துச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோயில் நடையை அா்ச்சகா்கள் வியாழக்கிழமை அதிகாலை திறந்தபோது கோயிலில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின் பேரில், கை.களத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, கோயிலில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.