பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 9) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் சிறுவாச்சூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரா. அசோக் குமாா்.
புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிகாடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்கு மாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிபாளையம், திருவிளக்குறிச்சி, அ. குடிகாடு, நல்லூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.