பெரம்பலூர் அருகேயுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் மே 7-ல் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா தொடங்கி தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மே 5 ஆம் தேதி மாவிளக்கு பூஜை, 6 ஆம் தேதி அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 8 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்கின்றனர்.