பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் உருவச்சிலைக்கு, பேரவையின் தலைவர் வேல். இளங்கோ தலைமையில், செயலர் கி. முகுந்தன் முன்னிலையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், முனைவர் தங்கப்பிரகாசம், கவிஞர் பெரியசாமி, சங்க நிர்வாகிகள் மகேந்திரன், சிங்காரவேலு, பக்கிரிசாமி, மதுரைகுமார், அக்ரி ஆறுமுகம், சக்கரபாணி, ஆசிரியர்கள் சிவானந்தம், நடராஜன், முத்துசாமி, வைரமணி, செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.