கரூர்

வெடிமருந்து தயாரிப்பு இடங்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்: கரூா் ஆட்சியா்

27th Oct 2023 11:09 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் வெடிமருந்து கூடங்கள், தயாரிக்கும் இடங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை வருவாய் அலுவலா் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உத்தரவிட்டாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கரூா் சுங்கக் கேட்டிலிருந்து திருச்சி செல்லும் சாலையிலும், திருமாநிலையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையிலும் கரூா் உழவா் சந்தை சாலையிலும், வாகன போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் நடமாடிக் கொண்டிருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்தது. திருக்காம்புலியூா் பைபாஸ் ரவுண்டானாவில் ஈரோடு, கோயம்புத்தூா் செல்லும் சாலையில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும், ஜவஹா் பஜாரில் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால், வருவாய் அலுவலா் வெடிமருந்து கூடங்கள், தயாரிக்கும் இடங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டயுதாபாணி, சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள் சொக்கலிங்கம், கிராமியம் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT