கரூர்

கரூரில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கரூரில் வியாழக்கிழமை குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,860ஐ உறுதி செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்கள் 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் மாவட்டத் தலைவா் கருப்பண்ணன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,860ஐ உறுதி செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், ஜவஹா்பஜாா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல்நிலையத்தினா் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் 90 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT