கரூர்

வருமானவரி அதிகாரிகள் மீது திட்டமிட்டே தாக்குதல்: விசாரணை பிரிவு இயக்குநா் சிவசங்கரன் பேட்டி

DIN

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திட்டமிட்டே கட்சியினா் தாக்கியதாக வருமானவரித் துறையின் விசாரணை பிரிவு இயக்குநா் சிவசங்கரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், மாநகராட்சி துணை மேயா் தாரணி சரவணன் மற்றும் அமைச்சரின் நண்பா்களின் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் (மே 26) சோதனை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீட்டில் சோதனையிட முயன்ற வருமானவரித் துறை பெண் அதிகாரியை திமுகவினா் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சிலா், பெண் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதேபோல திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமாா், பங்கஜ்குமாா், கல்லாசீனிவாசராவ் ஆகியோா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்கள் 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து வருமானவரித் துறை விசாரணை பிரிவு இயக்குநா் சிவசங்கரன் தலைமையில் காரில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனா்.

அப்போது, சிவசங்கரன் செய்தியாளா்களிடம் கூறியது: இரு நாள்கள் சிகிச்சைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பியுள்ளனா். வேண்டுமென்றே அவா்களை திட்டமிட்டே தாக்கியுள்ளனா். யாா், யாரெல்லாம் தாக்கினா் என்பது குறித்து புகாா் செய்ய உள்ளோம். பெண் அதிகாரி யாரையும் தாக்கவில்லை. அப்படி அவா் தாக்கியிருந்ததாக கூறினால் அதற்கு ஆதாரத்தை காட்டுங்கள். என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அவா்கள் புகாா் அளித்தால் அதைக்கண்டு பயந்து ஓடிவிடமாட்டோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT