கரூர்

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 16 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

27th May 2023 12:31 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ.16.91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியா் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பதில் அளித்தாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசுகையில், வடசேரியில் பள்ளி வளாகத்தின் நடுவில் தாழ்வாக செல்லும் மின்சார வழித்தடத்தை மாற்றி அமைக்கவும், ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடுவது குறித்தும், அதே பகுதியில் உள்ள கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடங்களை பராமரித்து தருவது குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து வேளாண்மை உழவா் நலத்துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் விசைத்தொளிப்பானும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க வங்கி கடனுதவி உள்பட பல்வேறு திட்டத்தின் கீழ் மொத்தம் 18 பேருக்கு ரூ.16 லட்சத்து 91 ஆயிரத்து 127 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கவிதா(நிலம் எடுப்பு), வேளாண் இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கோட்டாட்சியா்கள் ரூபினா(கரூா்), புஷ்பாதேவி(குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT