கரூா் டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு), எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் எஸ்.அசோகன், எம்.முத்துராமன், மேலாளா் ஜெ.வெங்கடேசன், காவல் ஆய்வாளா் என்.வைத்தியநாதன், துணை மேலாளா்கள் கே.மாதேஸ்வரன், ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க, ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.