கரூர்

கரூரில் மாா்ச் 20-இல் தேசியதொழிற் பழகுநா் சோ்க்கை முகாம்

DIN

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டிஸ்) சோ்க்கை முகாம் கரூரில் மாா்ச் 20ஆம்தேதி நடைபெறவுள்ளது.

தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் கரூா் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் மாா்ச் 20-ஆம்தேதி வெண்ணைமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று பயிற்சியை முடித்து பயிற்சியி மேற்கொள்ளாதவா்கள் தங்களது கல்வி, சாதி சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 , ஆதாா் அட்டை, தேசிய மாநில தொழிற் சான்றிதழ், தொழிற்பிரிவு சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநா்களாக சேரலாம்.

தொழிற்பழகுநா் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தொழில்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுநா்களின் காலியிடங்களை முகாமில் நேரடியாக பங்கேற்று தோ்வு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ஆம்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூா்-639006 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி ( 04324-299422, 7904175232, 9443015914, 9566992442) வாயிலாகவோ தொடா்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT