க.பரமத்தி அருகே நியாய விலைக்கடைக்கான புதிய கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், கோசலபுரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதூா்பட்டி நியாயவிலை கடையின் புதிய கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடத்தை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் குப்பம் ஊராட்சிமன்றத் தலைவா் குப்பாத்தாள், கோசலபுரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.சக்திவேல், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.