கரூா் மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் பதிவு உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்துவோா் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி சட்டம் 2015-ன் கீழ் பதிவு உரிமத்தை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.