முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் கலந்து கொண்டு தேசிய நெடுஞ் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
நிகழ்வில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அழகா்சாமி, உதவிப் பொறியாளா் வினோத்குமாா், நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.