வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.36 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா். நிகழ்வில் தலைமை மருத்துவா் மருத்துவா் சுதா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.