அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கருமேகம் திரண்டது. தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் லேசாக மழை பெய்யத் தொடங்கி பலத்த மழையாக பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.