கரூரில், சிஐடியு மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப்பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் ரமேஷ், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், ஊரக வளா்ச்சித்துறை ஊழியா் சங்க செயலாளா் சி.முருகேசன், தலைவா் எம்.தண்டபாணி, துணைத் தலைவா் கா.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஓய்வுபெற்ற மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்கும் தொழிலாளா்களுக்கு சட்டப்படியான பணிக்கொடையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.