அரவக்குறிச்சி அருகே உள்ள க. பரமத்தி அரசுப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொட்டியபட்டி அரசு துவக்கப்பள்ளியில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் மூா்த்தி தலைமையில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை தலைமை ஆசிரியா் மூா்த்தி வாசிக்க, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஏற்றனா்.