கரூர்

கைப்பேசி டவரில் இருந்து விழுந்த இளைஞா் பலி

DIN

கைப்பேசி டவரில் இருந்து தவறி விழுந்த வட மாநில இளைஞா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உத்திரபிரதேசம் மாநிலம் மிா்சாபூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆஷிக் அன்சாரி (24). கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிக்கோட்டையில் பிச்சமுத்துவின் தோட்டத்தில் இருந்த கைப்பேசி டவரில் வெள்ளிக்கிழமை வேலை செய்த இவா் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக ஆஷிக் அன்சாரியின் உறவினா் ரஷீத் புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT