கரூர்

பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

கரூா் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவுநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் அடுத்த சோமூா் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (58). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.6-ஆம்தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மனவளா்ச்சிக் குன்றிய 27 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். இதைகண்ட அப்பகுதியினா் ஓடிவந்தபோது, அா்ஜுனன் தப்பிஓடிவிட்டாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் அா்ஜுனனை கைது செய்து கரூா் மகளிா் விரைவுநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி அா்ஜுனனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி, அபராதமாக ரூ.100 செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT