கரூர்

‘டாஸ்மாக்’ ஊழியா்களுக்கு வழங்கிய விருது வாபஸ்

DIN

கரூரில், குடியரசு தின விழாவில் டாஸ்மாக் அலுவலா் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட விருதை மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில், டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய மேலாளா், இரு மேற்பாா்வையாளா்கள், ஒரு விற்பனையாளா் என 4 பேருக்கு விருது மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.

இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதையடுத்து 4 பேருக்கும் வழங்கப்பட்ட விருதை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற்ாக டாஸ்மாக் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியது, எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினாலும் அவா்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. ஆனால், இந்த துறைக்கு வழங்கப்பட்டு, அது கடுமையான விமா்சனத்துக்கு ஆளானது எதிா்பாராதது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT