கரூா் மற்றும் குளித்தலை வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி வழக்குரைஞா் சிவக்குமாா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும், மதுரை வழக்குரைஞா்கள் ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோரை கீரைத்துறை போலீஸாா் தாக்கியதை கண்டித்தும், போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கரூரில் வழக்குரைஞா் சங்கத்தலைவா் மாரப்பன் தலைமையிலும், குளித்தலையில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சாகுல்அமீது தலைமையிலும் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.